"ஹலோ தலைவரே, தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசின் இமேஜைக் கெடுப்ப தற்கான ரகசியத் திட்டங்கள் ரகசியமாகத் தீட்டப்பட்டுள்ளன.''”

Advertisment

"எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரையை மலர வச்சிடனும்ன்னு பகல் கனவு காணுறாங்களேப்பா?''”

"உண்மைதாங்க தலைவரே, இங்குள்ள தி.மு.க. அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பதோடு, அரசின் இமேஜை டேமேஜ் செய்துடனும்னு டெல்லி நினைக்குதாம். அதற்காக அமலாக்கப் பிரிவுக்கு சில முக்கியமான அசைன்மெண்ட்டுகள் கொடுக்கப்பட்டி ருக்கிறதாம். அதன்படி அமலாக்கத்துறை ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரையும் தீவிரமாகக் கண்காணிக்கிது. அதிலும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவர் நண்பர் அண்ணா நகர் கார்த்தி, மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி, எ.வ.வேலு உள்ளிட்ட 8 பேர் தொடர்பான சீக்ரெட் ஆவணங்களை ரகசியமாகத் திரட்டிய அமலாக்கத்துறை, அவர்கள் 8 பேர் மீதும் வழக்கைப் பதிவு செய்துவிட்டுத் தயார் நிலையில் காத்திருக்கிறதாம். சிக்னல் கொடுக்கும் போது அதன் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயுமாம். ஒன்றிய உளவுத்துறை தரப்பிலிருந்தே இப்படியொரு செய்தி வருகிறது.''”

"இந்த நேரம் பார்த்து, கோவையில் விபரீதமான ரணகளக் காட்சிகள் அரங்கேறி இருக்குதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, கோவையில், 13ஆம் தேதி, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சீரியசாக நடந்துகொண்டிருந்தது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தீவிரமடைவது குறித்து அவர்கள் சீரியசாக விவாதித்துக் கொண்டிருந் தனர். குறிப்பாக சில மாதங்களுக்கு முன் அங்கே கார் வெடிகுண்டு வெடித்தது குறித்த டாபிக் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த நேரம் பார்த்து, கொஞ்ச தூரத்தில் இருந்து ஒரு பகீர் தகவல் வர, அத்தனை அதிகாரிகளும் பரபரப்பாகி, அங்கே விரைந்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த இருவரை ஒரு கும்பல் வெட்டிச் சாய்க்க, அதில் கோகுல் என்பவர் உயிர் இழந் திருந்தார். அந்த ரத்தக்களறி டெரரை கண்ணெதிரே கண்ட அத்தனை காவல்துறை அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிக் கும்போதே இப்படியா? என அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். அடுத்த கொஞ்ச நேரத்தி லேயே துப்பாக்கியைப் பிரயோகித்து அந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரை அதிரடியாக மடக்கி இருக்கிறது போலீஸ் டீம்.''”

"சரிப்பா, புலித்தலைவர் பிரபாகரன் பற்றி பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் செய்திகள் உலகையே பரபரப்பாக்கி இருக்குதே?''”

prabhakaran

Advertisment

"அந்த செய்தி வெளியான பின்னணி குறித்து நமக்கு வந்த தகவலை முதலில் பகிர்ந்துக்கறேன். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அப்துல் என்பவர், முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவராம். 90களில் இவர் மூலம் நெடுமாறன் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் சொல்கிறார்கள். எனினும் அந்த அப்துலுக்கும் நெடுமாறனுக்கும் இருந்த தொடர்பு, அந்த காலகட்டத்திலேயே அறுந்து விட்டதாம். இந்த நிலையில், அந்த அப்துல், குடும்பத்துடன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர்கள் பெயரில் பெரிய வசூலிலும் ஈடுபட்டாராம். இதனால் கோபமடைந்த சுவிஸில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், அந்த அப்துலைப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கினார்களாம். அந்த அப்துல் மூலம்தான் பிரபாகரன் குறித்த செய்திகள் இங்கே வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த நிலையில் பழ. நெடுமாறன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடப்போவது இங்குள்ள சில முக்கிய பிரமுகர்களுக்கு முன்னதாகவே தெரிஞ்சிருக்கு.''”

"தெளிவாச் சொல்லுப்பா?''”

"பிரபாகரன் குறித்து, இப்படி ஒரு குண்டை நெடுமாறன் போடப்போகிறார் என்பது ஈழ ஆதரவுத் தலைவர்களான வைகோ, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருக்குத் தெரிய வந்திருக்கு. அவர்களும் விரைந்து தஞ்சாவூருக்கு வந்து, அங்குள்ள தமிழ்நாடு ஓட்ட லில் தங்கி யிருந்தபடியே, நெடுமாறனைத் தொடர்புகொண்டு, இதில் எந்த அள விற்கு உண்மை என்று கேட்டார் களாம். பிரபா கரன் மகள் துவாரகாவிடமே பேசி இதை உறுதிசெய்துவிட்டேன் என்று நெடுமாறன் சொல்ல, துவாரகாவின் தொடர்பு எண்ணை கொடுங்கள். நாங்களும் பேசிவிட்டு, உங்க ளோடு சேர்ந்து பேட்டி கொடுக்கிறோம் என்று அந்த மூவரும் சொன்னார்களாம். துவாரகாவின் எண்ணைத் தர மறுத்த நெடுமாறன், இறுதிப் போரின் போது, 25 கோடி ரூபாய் செலவில், கே.பி.யால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் தான் பிரபாகரன் தப்பித்தார் என்று தெரிவித் திருக்கிறார். அதை நம்ப மறுத்த அவர்கள் மூவரும், அங்கிருந்து கிளம்பிவிட்டார்களாம். இந்த விவகாரம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்துவரும் நிலையில், இந்தத் தகவலின் பின்னணியில் உளவுத்துறை இருக்கிறது என்ற சர்ச்சையும் கிளம்பியுள்ளது.''”

"உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் பிரபாகரன் வாழ்ந்துகொண்டுதானே இருக் கிறார். காங்கிரஸ் காரிய கமிட்டிப் பதவிக்கு, அந்தக் கட்சியினர் மத்தியில் போட்டிகள் அதிகமா இருக்குதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, காரியக் கமிட்டி என்கிற செயற்குழுவிற்குத் தான் அதிக அதிகாரம். 24 உறுப்பினர்களைக் கொண்ட, இந்த காரிய கமிட்டியில் 12 பேரை நியமிக் கும் அதிகாரம், கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே வுக்கு இருக்கிறது. எனவே இந்த நிய மனங்கள் குறித்து கார்கே, அண்மையில் கட்சியின் பவர் புள்ளி களான சோனியாவிடமும், ராகுலிடமும் ஆலோசனை நடத்தினாராம். இந்தப் பொறுப்பை அடைவதற்கு, மாநில அளவிலான தலைவர்கள் பலரும் காய்களை நகர்த்தி வருகிறார்கள். தமி ழகத்தைப் பொறுத்தவரை, ப.சிதம்பரம் இந்தமுறை காரியக் கமிட்டி உறுப்பினராக ஆசைப்படுகிறார் என்கிறார்கள். வருகிற 24ஆம் தேதி சத்தீஸ்கரில் நடக்கும் 3 நாள் மாநாட்டில், காரியக் கமிட்டி உறுப்பினர்களை அறிவிக்க இருக்கிறதாம் காங்கிரஸ்.”

"ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் இப்ப எப்படி இருக்குது?''”

"இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. என நான்கு முனைப் போட்டியால், களம் தகியாத் தகிக்கிது. இதற்கிடையே தங்கள் வெற்றிமீது சந்தேகம் கொண்டி ருக்கும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும், எப்படியாவது தேர்தலை நிறுத்த முடியுமான்னு பல வகையிலும் ரகசிய மூவ்களை நடத்தி வருகின்றன. காரணம், இந்த இரண்டு கட்சியும் தனித்தனியா எடுத்துப்பார்த்த சர்வேயில் டெபா ஸிட் கிடைப்பதே கஷ்டம்னு முடிவு வந்ததாம். அத னால், ஆளும்கட் சித் தரப்பு பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. செங்கோட் டையனும், பா.ஜ.க. அண்ணாமலையும் புகார் கொடுத்திருக் கிறார்கள். அதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும், தி.மு.க. தரப்பில் இருந்து லம்பாக பணம் எதையாவது பிடிக்கமுடியுமா?ன்னு பரபரத்துக்கிட்டு இருக்குது. இதற்கிடையில் அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக ஒரு வழக்கும் போடப்பட்டு இருக்குது.''”

"தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் ஓ.பி.எஸ். தரப்பு 20ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத் தைக் கூட்டி இருக்கிறதே?''”

ops"இடைத்தேர்தலில் எடப்பாடி நிறுத்திய வேட் பாளருக்கு ஆதரவாக, பா.ஜ.க.வின் நிர்பந்தத்தால் ஓ.பி.எஸ்., தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றார். இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கப்போவதாக அவர் அறிவித்துவிட்டு, எதிர்தரப்பில் இருந்து பிரச்சாரத்துக்கு அழைப்பு வருகிறதா என்று இத்தனை நாள் காத்திருந்தார். எடப்பாடித் தரப்போ ஓ.பி.எஸ்.ஸை கண்டுகொள்ளவே இல்லை. தானாக வாக்கு கேட்கச் சென்றாலும், இலை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் தென்னரசு, தன்னோடு பிரச்சாரத்துக்கு வருவாரா? என்கிற சந்தேகமும் ஓ.பி.எஸ்.ஸை திகைக்க வைத்திருக்கிறது. அதனால், இடைத்தேர்தலில் எப்படி தங்கள் பங்களிப்பைக் காட்டுவதுங்கிற குழப்பத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ். பேசாமல் இலைக்கு வாக்களிக்கும்படி, ஒரு அறிக்கையை மட்டும் வெளி யிட்டுவிட்டு ஒதுங்கிவிடலாமா? என்ற யோசனையும் அவருக்கு இருக்கிறதாம். எனவே, இது குறித்து முடிவெடுக்கவே 20ஆம் தேதி தங்கள் தரப்பு ஆலோ சனைக் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியிருக்கிறாராம்.''”

"பேனா நினைவுச் சின்னத்தில் முதல்வர் கொஞ்சம் தயக்கம் காட்டுவதாகத் தெரி யுதே?''

"ஆமாங்க தலைவரே...''

’"மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு நேரே, கடலில், கலைஞருக்கு 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் வைக்கும் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்தது. இது தொடர் பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தபோது, அந்த சின்னத்தை அமைத்தால் நானே உடைத் தெறிவேன் என்று நாம் தமிழர் சீமான் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, தனது இந்தக் கருத்தை பரப்பவும் செய்தார். அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட இதில் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தனர். இதனால் வருத்தமடைந்த முதல்வர் ஸ்டா லின், இவ்வளவு சங்கடங்களுக்கு நடுவில் அந்த பேனா சின்னத்தை அமைக்க வேண்டுமா? என்று யோசிக்கிறாராம். அதனால் அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்திருக் கிறதாம்.''

rr

"நானும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துக்கறேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தடை செய்யக் கூடும்னு, போன நக்கீரன் இதழில் நாம அட்டைப்படச் செய்தியா வெளியிட்டி ருந்தோம். இப்ப அங்க நடக்கும் சம்பவங்கள் அதை உறுதிப்படுத்துவதா இருக்கு. அ.தி.மு.க., தி.மு.க. சார்பாக வைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளில், உரிய அனுமதியில்லாமல் இருப்பதாகக் கூறி 10 அ.தி.மு.க. பணிமனைகளையும், தி.மு.க. பணிமனைகளையும் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்திருப்பதை தடைக்கான முன்னோட்டமாகத்தான் பார்க்க முடியுது.''

_______________

இறுதிச் சுற்று!

f

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 16-ந் தேதி வியாழக்கிழமை, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செலவம், உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், காந்தி, மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்றுவரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டதால் சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். திட்டங்களில் தொய்வு இருப்பதை சுட்டிக்காட்டி, அதனை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார் ஸ்டா லின். முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தை ஒருங்கிணைத்ததோடு, முதல்வரின் வேகத்திற்கேற்ப திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

-இளையர்